கிரிக்கெட்டை தனிப்பட்டோரின் செல்வாக்கிலிருந்து விடுவிக்க துணிச்சலான அணுகுமுறை தேவை : அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Monday, June 10, 2024

கிரிக்கெட்டை தனிப்பட்டோரின் செல்வாக்கிலிருந்து விடுவிக்க துணிச்சலான அணுகுமுறை தேவை : அமைச்சர் அலி சப்ரி

இலங்கை கிரிக்கெட்டை தனிப்பட்ட நிறுவனமாக மாற்றியவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க துணிச்சலான அணுகுமுறை தேவையென, இலங்கை கிரிக்கெட்டின் நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அமைச்சரவை உப குழுவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் இலங்கையின் இதயத்துடிப்பாகும். இது நமது தேசத்துக்கு புன்னகை, பெருமை மற்றும் ஒற்றுமையை கொண்டு வந்த விளையாட்டாகும். எங்களது வெற்றிகள் குறிப்பாக உலகக்கிண்ண வெற்றி அனைத்து இலங்கையரின் இதயங்களிலும் மறக்க முடியாத நினைவுகளை பதித்துள்ளது.

ஆயினும்கூட, இன்று, நமது நேசத்துக்குரிய விளையாட்டு நெருக்கடியிலுள்ளது.

ஐசிசி உலகக் கிண்ணம் 2023 மற்றும் ஐசிசி, டி 20 ஆகியவற்றில் சமீபத்தில் கிடைத்த ஏமாற்றங்கள், சாதாரண சம்பவங்கள் அல்ல. அவை நமது கிரிக்கெட் உட்கட்டமைப்புக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கும் பிரச்சினைகளின் அப்பட்டமான குறிகாட்டிகள்.

இந்தச் சிக்கல்களைத் தற்காலிகத் திருத்தங்களால் தீர்க்க முடியாது. நமது கிரிக்கெட்டை தனிப்பட்ட நிறுவனமாக மாற்றியவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் துணிச்சலான அணுகுமுறையே நமக்குத் தேவை.

நமது கிரிக்கெட்டின் நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவர் என்ற வகையில், சீர்திருத்தத்துக்கான அவசரத் தேவையை என்னால் சான்றளிக்க முடியும். எங்கள் அறிக்கை ஒரு தெளிவான பாதையை முன்வைக்கிறது.

மேலும் புதிய சட்டத்தின் மூலம் இந்த முக்கியமான மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கான விளிம்பில் இப்போது இருக்கிறோம். இலங்கை கிரிக்கெட்டுக்கு இது ஒரு தீர்க்கமான தருணம்.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய விளையாட்டுச் சட்டம் மற்றும் அரசியலமைப்புடன் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும்.

இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டோ வியாபாரமோ அல்ல. இது நமது தேசிய உணர்வின் பிரதிபலிப்பாகும்.

நமது வெற்றியை நிதி அளவீடுகளால் அளக்காமல், களத்தில் நாம் அடையும் வெற்றிகள் மற்றும் மக்களிடம் உள்ள நம்பிக்கையை வைத்து அளவிட வேண்டும்.

தற்போது, எங்களின் செயல்திறன் ஏற்கத்தக்கதாக இல்லை. மாற்றத்துக்கான நேரம் இது என் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment