எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் ஜே.வி.பி.யினரே - பிள்ளையான் - News View

About Us

About Us

Breaking

Friday, June 28, 2024

எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் ஜே.வி.பி.யினரே - பிள்ளையான்

ஜே.வி.பி கட்சியிதான் ஒரு பிரபல்யமான ஆயுதக்குழு எமது கட்சிக்கு ஆரம்பத்தில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள். பின்பு எங்களிடம் ஆயுதம் கேட்டவர்கள் மக்களை சுடுவதற்கு நான் கொடுக்கவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (27) மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜே.வி.பி கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கருத்து வெளியிட்டபோது ஒரு பிரபல்யமான ஆயுதக்குழு மக்களை அச்சுறுத்துவதாக தெரிவித்திருந்தார். அதற்கு பதில் வழங்கும் வகையில் இன்று (28) மட்டக்களப்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகக்கு தலை சரியில்லை. அவர்கள்தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள். பின்பு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள் மக்களை சுடுவதற்கு நான் ஆயுதம் கொடுக்கவில்லை. அவர் மட்டக்களப்புக்கு வந்தால் பொறுப்புடன் கதைக்கப் பழக வேண்டும்.

அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் அதனை தேடிப் பார்க்கட்டும். அவர் மக்களை நான் அச்சுறுத்துவதாகச் சொன்னால் மட்டக்களப்பில் அதிக வாக்குகளை பெற்றவர் நான். ஜனநாயகத்தைப் பற்றி கதைப்பவர்கள் பொறுப்பாக யோசித்து கதைக்க வேண்டும்

நாட்டை தீக்குளிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை வன்முறைக்கு தூண்டிய ஒரு கட்சிதான் அவரின் கட்சி. நாட்டை அழிக்க செய்த ஒரு கட்சி, எமது மண்ணில் இவ்வாறு கதைப்பது வேதனைக்குரிய விடயம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment