நாட்டிலுள்ள யானைகள் கணக்கெடுப்பை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் யானைகள் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த கணக்கெடுப்பு பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னர் நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 2,500 நீர்நிலைகளை இலக்காகக் கொண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்காக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்த சுமார் ஏழாயிரத்து ஐநூறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பேச்சாளர் கூறினார்.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழமை. கடந்த 2011ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இறுதியாக நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் சுமார் 5,800 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment