தடுப்பூசி ஏற்றியவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 16, 2024

தடுப்பூசி ஏற்றியவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை

அஸ்ட்ராசெனிகா (AstraZeneca) தடுப்பூசியை ஏற்றியவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என, தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை செலுத்தியதால், இரத்த உறைவு, பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நுரையீரல் அடைப்பு உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனத்தின் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்என, தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம் ஏற்றுக்கொண்டது. 

இதையடுத்து, இந்நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் மீளப் பெறப்பட்டன. இதன் பின்னணியில் பரவிய செய்தி குறித்தே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment