எட்டு மருந்து வகைகளுக்கான பதிவு சட்டத்துக்கு முரணானது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 16, 2024

எட்டு மருந்து வகைகளுக்கான பதிவு சட்டத்துக்கு முரணானது

தடுப்பூசி மயக்க மருந்துக்காகவும் மூளை தொடர்பான நோய் சிகிச்சைக்காகவும் இலங்கை நிறுவனம் தயாரித்த எட்டு வகையான மருந்து வகைகளை பதிவு செய்தமை சட்டத்துக்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

இந்த மருந்து வகைகளை ஆறு மாத கால கண்காணிப்பு அவகாசத்திற்கு உட்படுத்தப்படாமல் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை பதிவு செய்ய எடுத்த தீர்மானமே சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டயுள்ளது.

இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கல் செய்த இந்த மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டன. 

தனியார் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட 08 வகையான தடுப்பூசிகளை ஆறு மாத கால அவகாசத்திற்கு உட்படுத்தாமல் பதிவு செய்ய தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மேற்கொண்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.

No comments:

Post a Comment