கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள், செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்றுமுன்தினம் நிறைவடைந்துள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சுமார் 4 மாதங்கள் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பரீட்சையின் சில பாடங்கள் தொடர்பில் செயன்முறைப் பரீட்சைகள் நடத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூன்று கட்டங்களாக பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவித்த அவர், முடிந்தளவு விரைவாக பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் இந்த மாதத்திற்குள் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியும் என தெரிவித்துள்ள அவர், இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment