நாட்டில் தொழு நோயாளர்கள் அதிகரிப்பு : சிறுவர்களும் அதிகளவில் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 16, 2024

நாட்டில் தொழு நோயாளர்கள் அதிகரிப்பு : சிறுவர்களும் அதிகளவில் பாதிப்பு

நாட்டில் தொழு நோயாளர்கள் தொகை அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.

இதுபற்றித் தெரிவித்த அவர், 2023 ஆம் ஆண்டில் 1,580 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டனர். 

பாதிக்கப்பட்ட 1,580 பேரில் 180 குழந்தைகள் உள்ளனர். மேலும் 12 வீத குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்கள். எனினும் நோயைப் பரப்பும் திறன் இவர்களிடம் இல்லை. 

அத்துடன் இந்த ஆண்டு, 8 வீத மாற்றுத்திறனாளி நோயாளிகளை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தொழு நோய் தொடர்பில் பொதுமக்களிடையே படிப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்று (14) புதிய இணையத்தளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

தொழு நோய் தடுப்பு இயக்கம் மற்றும் அலையன்ஸ் டெவலப்மெண்ட் டிரஸ்ட் நிறுவனத்தின் கூட்டு முயற்ச்சியில் குறித்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதுடன்  அக்ட்ரூப்ரிவேன்ட் (ACT2Prevent) என்ற பெயரில் இந்த இணையத்தளம் செயற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளம் வாயிலாகத் தொழு நோய் தொடர்பான விடயங்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தொழு நோயாளர்கள் சமூகத்தின் பார்வையில் ஒதுக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஆகையால் தொழு நோயார்களுக்கான சமூக அங்கீராத்தை பெற்றுத்தரும் மாற்றத்திற்கான ஒரு முயற்சியாக இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றுத் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், சிகிச்சைகள் தொடர்பில் விரிவான தகவல்கள்  இங்கு பகிரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழு நோயாளர்களின் குறுகிய மனப்பாங்கை இல்லாதொழித்து உரிய சிகிச்சைகளைப் பெற உதவும் வகையில் குறித்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment