அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 15 விடுமுறை : பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 10, 2024

அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 15 விடுமுறை : பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்றையதினம் (10) இதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்கள புதுவருடத்தின் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய நிகழ்வு திங்கட்கிழமை (15) வருவதால், அன்றையதினம் தேசிய எண்ணெய் தேய்க்கும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவிக்குமாறு அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment