உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து எதிர்வரும் 4 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பிலான விடயங்களை இன்று ஆராய்ந்த பின்னர் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் முன்வைத்த முன்மொழிவுகளின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தான் அறிந்திருப்பதாக மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பான வாக்குமூலத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அவர் கடந்த திங்கட்கிழமை வழங்கியிருந்ததையடுத்து, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு, தமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment