பல்கலைக்கழக மாணவன் மரணம் : நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 25, 2024

பல்கலைக்கழக மாணவன் மரணம் : நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

களனி பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் கவனக் குறைவைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனனர். 

பல்கலைக்கழகத்தின் கன்னங்கர மாணவர் விடுதி மாணவர் ஒருவர் உயிரிழந்தமைக்கு பொறுக்கூற வேண்டும் என்று கோரியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இவ்விடுதியில் உள்ள மாணவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென சகவீனமடைந்ததால் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வாகன வசதிகள் செய்து தருமாறு விடுதியின் நிர்வாக அதிகாரிக்கு தொலைபேசி மூலம் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

எனினும் மாணவர்களின் தொலைபேசி அழைப்புக்கு அவர் பதில் வழங்காதிருந்துள்ளார். இதனால், சுகவீனமுற்ற மாணவனை சக மாணவர்கள் முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு சென்ற வேளையில் குறித்த மாணவர் உயிரிழந்திருந்தார்.

மொனராகலை வடல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம். நிரோஷன லக்மால் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு எதிராக நேற்று (25) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கருவில் அமர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இவர்கள் மேற்கொண்டனர்.

அதேவேளை, சுகவீனமுற்ற மாணவரின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment