இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் : நிரந்தர வதிவிட வாய்ப்பை பெறவும் வழி - News View

About Us

About Us

Breaking

Thursday, February 29, 2024

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் : நிரந்தர வதிவிட வாய்ப்பை பெறவும் வழி

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜப்பானின் கட்டட தூய்மைப்படுத்தல் துறையில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது. இதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் நேற்று (28) ஜப்பான் கட்டடத் சுத்தப்படுத்தல் பணியாளர்கள் சங்கத்தினருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாய்ப்புகளை இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கியமைக்காக ஜப்பான் அரசுக்கும் அந்நாட்டின் நீதியமைச்சருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் அமைச்சரால் தெரிவிக்கபப்ட்டது.

ஜப்பானிய மொழி புலமை மட்டம் N4 விண்ணப்பதாரிகள் SSW பிரிவில் இதற்கு தகுதி பெறுவதோடு, தகைமையை உறுதிப்படுத்தும் தகுதிகாண் பரீட்சை நேர்முகப் பரீட்சை எழுத்து மற்றும் செயன்முறை என இரண்டு பிரிவுகளில் நடாத்தப்படும்.

இந்த தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் SWW 27 மட்டத்திற்குள் வருவதன் காரணமாக, முகாமைத்துவ பதவிக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும், அதன் மூலம் ஜப்பானில் நிரந்தர வதிவிடத்திற்கான வாய்ப்பும் கிடைக்குமென, இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜப்பானிய பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இப்பரீட்சைக்கு ஏற்றவாறு பாடப்புத்தகங்கள் மற்றும் காணொளிகள் பரீட்சாதிகளுக்கு வழங்கப்படும் என இங்கு சங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டது.அவை மக்களிடம் சென்றடைவதற்கான முறையை தயார் செய்யுமாறு அமைச்சர் இதன்போது பணிப்புரை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் ஜப்பானிய கட்டடத் தூய்மைப்படுத்தல் பணியாளர்கள் சங்கத்தின் விசேட பிரதிநிதியாக சச்சியோ சுகியாமா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment