உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தொடர்பில்லை : அருட்தந்தை தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 19, 2024

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தொடர்பில்லை : அருட்தந்தை தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­லுடன், சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்­லாஹ்­வுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், அவ­ருக்கு எதிராக தொட­ரப்­பட்­டுள்­ள வழக்கின் தீர்ப்­புக்­காக காத்திருப்பதாகவும் அருட்­தந்தை நந்­தன மன­துங்க தெரி­வித்தார்.

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கு (16) விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட பின்னர், நீதி­மன்­றுக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் தொடர்பில் பல்­வேறு உண்­மைகள் தற்­போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கும் இந்த தாக்குதல்களுக்கும் எந்த சம்­பந்­தமும் இல்லை. அத­னா­லேயே நாம் இன்று அவ­ருக்கு ஆத­ரவு தெரி­விக்க நீதி­மன்­றுக்கு வந்தோம். 

ஹிஜாஸை போன்றே இந்த தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பில்­லாத மேலும் பலரும் பல்­வேறு தேவை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்­டனர். இப்­போது உண்மைச்சூத்­தி­ர­தா­ரிகள் தொடர்பில் பல்­வேறு தகவல்கள் வெளிப்ப‌டுத்­தப்­பட்­டுள்­ளன. ஹிஜாஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்காக நாம் காத்திருக்கின்றோம் என்­றார்.

Vidivelli

No comments:

Post a Comment