ஹஜ் யாத்திரைக்கு மேலும் 500 பேருக்கு வாய்ப்பு : பதிவுகளுக்கு முந்துமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Friday, January 12, 2024

ஹஜ் யாத்திரைக்கு மேலும் 500 பேருக்கு வாய்ப்பு : பதிவுகளுக்கு முந்துமாறு வேண்டுகோள்

சவூதி அரே­பியா ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு இவ்­வ­ருடம் இலங்கைக்கு வழங்­கி­யுள்ள 3500 ஹஜ் விசாக்­களை எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­திற்குள் பூர­ணப்­ப­டுத்­து­மாறு அரச ஹஜ் குழுவைப் பணித்துள்ளது.

இது­வரை 3000 பேர் ஹஜ் யாத்­தி­ரைக்குத் தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்­ளனர். 

இந்­நி­லையில் எஞ்­சி­யுள்ள 500 பேருக்­கான பதி­வினை உட­ன­டி­யாக மேற்­கொள்­ளு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களம் முஸ்­லிம்­களைக் கோரி­யுள்­ளது. 

பதி­வு­களை இணை­யத்­த­ளத்­தி­னூ­டாக மேற்­கொள்­ளு­மாறு வேண்டப்பட்­டுள்­ளார்கள்.

இது தொட­ரப்­பாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்­பாளர் என்.நிலோபர் அனைத்துப் பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­க­ளுக்கு அறிவித்துள்ளார். 

குறிப்­பிட்ட அறி­வித்­தலை ஜும்ஆ தொழு­கையின் பின்பு அறிவிக்குமாறும், விளம்­பரப் பல­கையில் காட்­சிப்­ப­டுத்தும் படியும் கோரிக்கை விடுத்­துள்ளார்.

திணைக்­க­ளத்தில் பதிவு செய்­துள்­ள­வர்கள் தங்கள் பதிவை உறுதிப்ப­டுத்­து­வ­த­றக்­காக BOC ஹஜ் கணக்கு இல 2327593 க்கு 25 ஆயிரம் ரூபா செலுத்தி வங்கி பற்­றுச்­சீட்டை திணைக்­க­ளத்­துக்கு சமர்ப்­பித்து திணைக்­க­ளத்தால் வழங்­கப்­படும் பற்­றுச்­சீட்டை பெற்றுக்­ கொள்­ளு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளார்கள்.

3500 க்கு மேற்படும் பதிவுகள் இரத்துச் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment