நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர் வருடத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல், கண்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு பொதுமக்களிடம் தேசிய கண் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மங்கள தனபால கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலே இந்த வேண்டுகோளை அவர் முன்வைத்தார்.
நாட்டின் சனத் தொகையில் 03 மில்லியன் பேர், நீரிழிவு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவர்களில் 03 இலட்சம் பேர் பார்வையை இழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment