மழை வீழ்ச்சி அதிகரிப்பால் மின் கட்டணம் குறைகிறது? - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 15, 2023

மழை வீழ்ச்சி அதிகரிப்பால் மின் கட்டணம் குறைகிறது?

இலங்கை மின்சார சபையில் அடுத்து வரும் மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனாலேயே இம்முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி மேலும் தெரிவித்த அவர், தற்போது தேசிய மின்சார உற்பத்தியில் 52 வீதம், நீர் மின்சார உற்பத்தியே செய்யப்படுகிறது. மேலும், மின் உற்பத்தி நிலையங்களை அண்டியுள்ள பகுதிகளில் தற்போது கடும் மழை பெய்து வருகிறது. 

இந்நிலை தொடரும் பட்சத்தில் இந்நிவாரணத்தை மக்களுக்கு வழங்க முடியுமெனவும் மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment