வீட்டில் தூங்கிய 07 வயது சிறுமியை கடத்திச் சென்று பணயக் கைதியாக வைத்திருந்த நபர், காதலியை கடத்திச் சென்ற சம்பவம் ஹொரணையில் இடம்பெற்றுள்ளது.
கடத்திச் சென்ற சிறுமியை கொலை செய்யப்போவதாகவும் இந்நபர் மிரட்டியுள்ளார். இந்நபரைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சிறுமி, கெஸ்பாவ பெடிக்கிரியதெனிய பிரதேசத்தில் உறவினர் வீட்டில் கைவிட்டுச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சிறுமியின் அத்தையை பத்து வருடங்களாக இந்நபர் காதலித்து வந்துள்ளார். குறித்த இந்நபர் போதைக்கு அடிமையானதால், இரண்டு மாதங்களுக்கு முன்னர் காதலி, தொடர்பை துண்டித்திருந்தமையும் தெரிய வந்துள்ளது.
கடந்த 13ஆம் திகதி அதிகாலை 6:30 மணியளவில் வேறொரு நபருடன் கோனபொல வீட்டுக்கு வாகனமொன்றில் வந்த சந்தேகநபர், வீட்டினுள் சென்று காதலியான இளம் பெண்ணை தேடியுள்ளார். அவர் வேலைக்கு சென்றிருந்ததால், 07 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தகவலறிந்த மொரகஹஹேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துசித்த விக்கிரமரத்ன, உடனடியாக சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தி சந்தேகநபர் தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டுள்ளார்.
சிறுமியை கடத்தி வாகனத்தில் தப்பிச் சென்ற சந்தேகநபர், தனது காதலிக்கு சிறுமியின் புகைப்படத்தை வாட்ஸப் மூலம் அனுப்பி, தன்னிடம் வராவிட்டால் சிறுமியை கொன்று விடுவதாக அச்சுறுத்தி அவரை கெஸ்பாவ நகருக்கு வரவழைத்துள்ளார்.
No comments:
Post a Comment