ஆணுறுப்பைக்காட்டிய சமூர்த்தி உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 9, 2023

ஆணுறுப்பைக்காட்டிய சமூர்த்தி உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

பாறுக் ஷிஹான்

வட்ஸ்அப் செயலியினூடாக குடும்பப் பெண்ணிற்கு ஆணுறுப்பைக்காட்டி பாலியல் தொந்தரவு செய்து சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிரதான சந்தேகநபரான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான சாய்ந்தமருது 4ஆம் பிரிவினைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மட் நழீம் (வயது-45) என்பவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த திங்கட்கிழமை (7) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியொன்றில் வசிக்கின்ற 2 பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணிடம் தையல் மெசின் உட்பட பல சலுகைகளைப் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது ஆணுறுப்பினை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் செயலியூடாக குடும்பப் பெண்ணின் கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக அனுப்பி பாலியல் சேட்டை செய்து வருவதாக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கெதிராக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.

இதற்கமைய சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எம். ஐயூப் தலைமையிலான பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சந்தேகநபரான 41 வயது மதிக்கத்தக்க சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரைக் கைது செய்திருந்தனர்.

மேலும், சந்தேகநபரான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பல்வேறு திருமணங்கள் செய்துள்ளதுடன், இவ்வாறு விதைவைப் பெண்கள், தனிமையிலுள்ள பெண்களை நாடி தனது இச்சைக்காக ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைதான சந்தேகநபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்டநடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், குறித்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment