தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை அனுப்பி வைக்க தீர்மானம் : ஜனாதிபதியை விரைவில் சந்திக்கின்றார் சம்பந்தன் - News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, August 6, 2023

demo-image

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை அனுப்பி வைக்க தீர்மானம் : ஜனாதிபதியை விரைவில் சந்திக்கின்றார் சம்பந்தன்

ranil44
ஆர்.ராம்

13ஆவது திருத்தம் சம்பந்தமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளது. அத்துடன் விரைவில் சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை கோரியுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் அக்கட்சியின் வெளிவிகாரங்களுக்கான செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக 13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக தமிழரசுக் கட்சியின் பரிந்துரைகளை வரைவு செய்து அனுப்புவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரைவு தயாரிப்பு பணிகளை சம்பந்தனின் வழிகாட்டலில் சுமந்திரன் முன்னெடுக்க உள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டின்போது அதிகாரப்பகிர்வு, மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான கலந்துரையாடல் சுமூகமற்ற நிலையில் நிறைவுக்கு வந்துள்ள சூழலில் அது குறித்து விரைவில் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த சந்திப்பில் சம்பந்தன் மட்டும் பங்குபற்றுவதா இல்லை சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவதா என்பது சம்பந்தமாக இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *