நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட “கல்கட்டஸ்” துப்பாக்கி வெடித்து இளம் சோடிகள் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (07) இரவு 10.30 மணியலவில் இலக்கம் (05) டொப்பாஸ் எனும் முகவரியில் அமைந்துள்ள தனி வீட்டில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் திருமணமாகி எட்டே மாதங்களான இளம் கணவன், மனைவியான எண்டன் தாஸ் (32) மற்றும் நாதன் ரீட்டா (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்தை பார்வையிட்டப்பின்னர் மரண விசாரணைகள் இடம்பெற்று சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஆ.ரமேஸ்
No comments:
Post a Comment