மன்னாரில் வாள் வெட்டு : இருவர் படுகாயம் : 4 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, August 10, 2023

மன்னாரில் வாள் வெட்டு : இருவர் படுகாயம் : 4 பேர் கைது

மன்னார், இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்றாம்பிட்டி பகுதியில் 50 வயது பெண்ணொருவர் மீதும், 27 வயது இளைஞர் ஒருவர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (09) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் முதலில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பாலியாறு, மூன்றாம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாலியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலுப்பைக்கடவை பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment