நாடு முழுவதும், 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையுமின்றி, நோயாளருக்கு சிகிச்சையளிப்பதாக ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவிக்கும்போதே ஆவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இது பாரிய பாரதூரமான விடயமாகுமென்றும் அவர் குறிப்பிட்டார். இவ் விடயம் தொடர்பில், பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment