உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி வெளியானது - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 4, 2023

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி வெளியானது

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 44 ஆவது உறுப்புரையின் கீழ் பங்குத் தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் 55ஆம் பிரிவின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணை கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய தேசிய கடன் மறுசீரமைப்புக்கான சகல நடவடிக்கைகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், திங்கட்கிழமை (02) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் படுகடன் பதிவாளருக்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அதிகாரம் வழங்கப்படுகின்றது.

அத்துடன், ஜூன் 28 ஆம் திகதியன்று இருப்பிலிருந்த பங்குகள் அல்லது பிணையங்களின் ஒரு பகுதியை மாற்றுகின்ற அல்லது பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான அதிகாரமும் வழங்கப்படுகின்றது.

திறைசேரி முறிகளை உருவாக்கும்போதும் வௌியிடும்போதும் ஏற்படும் ஏதேனும் செலவுகளை செலுத்துவதற்கான அதிகாரமானது, தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் படுகடன் பதிவாளருக்கு அதிகாரமளிக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment