தண்டப் பணத்தை அதிகரிக்க நடவடிக்கை - லசந்த அழகியவன்ன - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 20, 2023

தண்டப் பணத்தை அதிகரிக்க நடவடிக்கை - லசந்த அழகியவன்ன

(எம்.வை.எம்.சியாம்)

நாடளாவிய ரீதியில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக தண்டப் பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

வாகனம் செலுத்துவதற்கு முன்னர் சாரதியின் உடல் தகுதி மற்றும் மனநிலை ஆகியவற்றை துல்லியமாக பரிசோதிக்கும் இயந்திரம் வெயங்கொடையிலுள்ள தனியார் பயிலுனர் சாரதி பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது. அதனை அவதானிப்பதற்காக சென்ற போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தற்போது நடைபெற்றுவரும் பரிசோதனைகள் மட்டுமின்றி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓட்டுநர்களின் உடல் நலம் மற்றும் மன நிலையை அளவிடும் முறையிலும் நாங்கள் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக தண்டப் பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக அபராதத்தை மேலும் அதிகரிப்பது, தண்டனையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment