ஐந்து கோடி ரூபாய் செலவிட்டாரா ? மறுக்கிறார் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Monday, June 19, 2023

ஐந்து கோடி ரூபாய் செலவிட்டாரா ? மறுக்கிறார் அலி சப்ரி

வெளிநாட்டுப் பயணங்களுக்காக 05 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். 

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு செய்தியாளர் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்ததாக ஒரு ட்வீட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் இந்த பணத்தை வெறும் 07 வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் செலவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தகவல் தவறானதென அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இது ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட ஐந்து உத்தியோகபூர்வ தேசிய தூதுக்குழு பயணங்களுக்கும், அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்குமான இரு தரப்பு பயணங்களின் மொத்த செலவாகுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயணங்களின்போது தாம் தூதுக்குழுக்களுக்கு தலைமை ஏற்றுச் சென்றதாக தெரிவித்துள்ள அலி சப்ரி, தம்மை தவிர மேலும் 22 அதிகாரிகள் இந்த பயணங்களில் இணைந்திருந்ததாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment