ரஷ்ய விமானி இலங்கையில் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 17, 2023

ரஷ்ய விமானி இலங்கையில் உயிரிழப்பு

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவையின் துணை விமானி ஒருவர் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து உறவினர்கள் வரும் வரை விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

63 வயதான Dovgaienko Valerii என்ற துணை விமானியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை (15) இரவு 10:00 மணியளவில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலுள்ள கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

16 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு ரஷ்யாவின் மொஸ்கோவிற்கு கட்டுநாயக்காவிலிருந்து புறப்படவிருந்த ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானத்தின் துணை விமானியாக உயிரிழந்தவர் கடமைக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த துணை விமானியின் உறவினர்களுக்கு ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்லைன் மற்றும் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் ஊடாக பிரேத பரிசோதனையில் கலந்துகொள்ள வருமாறு கட்டுநாயக்க பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, உறவினர்கள் வரும்வரை குறித்த துணை விமானியின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment