பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுப்பட்டுள்ள காரணத்தினால், பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் சனிக்கிழமை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை பயணமானார். தனது விஜயத்தின்போது நிதி ஒப்பந்தத்திற்கான சர்வதேச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
சர்வதேச நிதி ஒப்பந்தத்திற்கான சர்வதேச தலைவர்கள் மாநாட்டின் உயர் மட்ட கலந்துரையாடலில் உரையாற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாரிஸில் இம்மாதம் 22, 23 ஆம் திகதிகளில் புதிய சர்வதேச நிதி ஒப்பந்தத்திற்கான சர்வதேச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"உலக நாடுகள் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடியான சவால்களுக்கு தீர்வு காண்பது" என்ற தொனிப்பொருளில் நிதி ஒப்பந்தத்திற்கான சர்வதேச தலைவர்கள் மாநாடு இந்த வருடம் நடைபெறுகிறது.
சர்வதேசத்தை பெரிதும் உலுக்கியுள்ள பல நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment