ஓமானில் வேலை : பண மோசடி செய்த ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 27, 2023

ஓமானில் வேலை : பண மோசடி செய்த ஒருவர் கைது

முறையான அனுமதிப்பத்திரமின்றி ஓமானில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நேற்றுமுன்தினம் ஹெட்டியாராச்சி, மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓமானில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடம் இருந்து 390,000 ரூபாவை பெற்றுக் கொண்டு வேலை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைவாக சந்தேகநபர் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக பணியகத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், சந்தேகநபரை புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கு ஜூலை 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment