மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்ட விமானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 29, 2023

மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்ட விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நரீடா சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவ்விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானம் நேற்று (28) இரவு 8.20 மணிக்கு ஜப்பானுக்கு புறப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்று 2 மணி 25 நிமிடங்கள் வரை பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் ஏ330 - 300 எனும் இலக்க விமானமே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.   

அவ்விமானத்தின் சில்லுத் தொகுதி வெளிப்பகுதியில் தெரிவது கணினி கட்டமைப்பு மூலம் காணப்படாததால், விமானியால் அவ்விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு எந்தவித அனர்த்தங்களுமின்றி மீண்டும் கொண்டு வரப்பட்டு தரையிறக்கப்பட்டது.

அவ்விமானத்தில் பயணிகளும் விமான ஊழியர்களுமாக 301 பேர் இருந்தனர்.

இதனையடுத்து, அப்பயணிகளை வேறொரு விமானத்தில் ஜப்பானின் நரீடா விமான நிலையத்துக்கு அனுப்புவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment