O/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பம் கோரல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 30, 2023

O/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பம் கோரல்

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக விடைத்தாள் திருத்தும் உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இதற்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க நேற்று (29) முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்படி உத்தியோகத்தர்கள் தமது விண்ணப்பங்களை onlineexams.gov.lk/eic இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்க முடியமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நேற்று ஆரம்பமாகிய கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் (08) வரை நடைபெறவுள்ளது. 

பரீட்சைகள் நிறைவு பெற்றவுடன் விடைத்தாள் திருத்தும் பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment