எவ்வாறு விமர்சித்தாலும் அரசாங்கத்தை விட்டுச் செல்லப் போவதில்லை : அலி சப்ரி ரஹீம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 30, 2023

எவ்வாறு விமர்சித்தாலும் அரசாங்கத்தை விட்டுச் செல்லப் போவதில்லை : அலி சப்ரி ரஹீம்

எதிர்க்கட்சியினர் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கத்தை கைவிட்டுச் செல்லப் போவதில்லையென, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.

தமக்குச் சொந்தமான வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்று துபாயிலுள்ளதாகவும், தாம் அங்கு அடிக்கடி சென்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுங்க அதிகாரிகளினால் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தண்டப்பணம் செலுத்திய பின்னர் விடுதலையாகிய பின்னர், அவர் மீண்டும் துபாய் நாட்டுக்கு சென்று தமது நிறுவனத்தின் நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளார்.

துபாயிலுள்ள தமது முகவர் நிறுவனத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே தொழில் புரிவதாகவும், அடிக்கடி அங்கு சென்று அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்துவிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment