வடக்கு மற்றும் கிழக்கு தொல்பொருள் இடங்களை அழித்தமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தமை தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் வரைபு, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டது.
தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்புகளின் ஒன்றியம் கடந்த (26) பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் இவ்வரைபை கையளித்தது.
தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் அமைப்புக்களின் ஒன்றியத்தின் சார்பில், கலாநிதி வண. மதுருஓயே தம்மிஸ்ஸர தேரர், கலாநிதி குணதாசஅமரசேக்கர, சிரேஷ்ட சட்டத்தரணி கல்யாணந்த திராணகம உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment