விமான நிலையங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்திலுள்ள முக்கிய பிரமுகர்களுக்கான முனையங்களில், சோதனைகளுக்குட்படுத்தாது அங்கிருந்து வெளியேறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் நீக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாக வருகை தந்து, சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென விசேடமான சலுகைகள் அவசியமில்லையென்று அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், விஷேட பிரமுகர் முனையத்தில் வழங்கப்பட்டுள்ள இவ்வாறான சலுகைகள் திருட்டுகள் மற்றும் மோசடிகளுக்கு வழிவகுக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால், முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் இதுபோன்ற சிறப்புரிமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment