20 தினங்களில் 16 பேர் உயிரிழப்பு : நாட்டில் கொவிட் தீவிரம் - News View

About Us

Add+Banner

Thursday, May 18, 2023

demo-image

20 தினங்களில் 16 பேர் உயிரிழப்பு : நாட்டில் கொவிட் தீவிரம்

63fe1091-covid-
நாட்டில் மீண்டும் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 20 தினங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சில் தொற்றுநோய் பிரிவு தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் (27) இல், கொரோனா நோயினால் ஒருவர் மரணித்தார். இம்மாதத்தில் (23) ஒரு மரணமும் மே (01) இல், ஒரு மரணமும் இடம்பெற்றது.

அத்துடன் மே (05) மேலும் மூன்று மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 08 மற்றும் 09ஆம் திகதிகளில் 02 மரணங்கள் நிகழ்ந்துள்ளதுடன் 11ஆம் திகதி மேலும் இரண்டு மரணங்களும் 12ஆம் திகதி 02 மரணங்களும் 14ஆம் திகதி மற்றுமொரு மரணமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 6,72,304 கொவிட்19 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *