கிழக்கு மாகாண ஆளுநர், சாணக்கியனுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள அமைச்சர் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Friday, March 31, 2023

கிழக்கு மாகாண ஆளுநர், சாணக்கியனுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள அமைச்சர் நஸீர் அஹமட்

ஏறாவூர், புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் மட்டுமல்ல, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனாலோ அல்லது வேறு எவராலோ முடியாதென, அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர், புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் தொடர்பில் வெளிவந்த வீடியோக் காட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என்னை விமர்சிக்கும் தொனியில் பேசியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்டு சூறையாடப்பட்டு, இன்னும் கள்வர்களுடைய கையில் இருப்பதை முடியுமானால் வாய் திறந்து சாணக்கியனால் பேச முடியுமா? என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கேள்வி எழுப்புகையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தைரியம் இருந்தால் சிறுபான்மை சமூகத்துக்காக பேச வேண்டுமாயின், உங்களுடைய நடிப்பை மூட்டை கட்டி விட்டு, கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகத்துக்குட்பட்ட 240 சதுர கிலோ மீற்றர் காணியையும் கோறளைப்பற்று மேற்குப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 176 சதுர கிலோ மீற்றர் காணியையும் முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு கொடுக்குமாறு பேச முடியுமா?

அதேபோல் காத்தான்குடி, பூநொச்சிமுனையை மட்டக்களப்பு மண்முனை பிரதேச சபைக்கு இணைத்து வைப்பதனை காத்தான்குடி பிரதேச சபைக்கு இணைக்க வேண்டுமென்று பேச முடியுமா? 

காத்தான்குடியை அண்டிய பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காணிகளையும் ஏப்பமிட்டுள்ளதை சாணக்கியனால் வாய் திறந்து பேச முடியுமா? தளவாய் முஸ்லிம் எல்லைக் காணிகளை பிரித்ததை மீண்டும் முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டுமென பேச முடியுமா?

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? முடிந்தால் திட்டமிட்டு களவாடிய இக்காணிகளையும் முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க உங்களால் பேச முடியுமா?

சாணக்கியனுக்கு பணிவான வேண்டுகோள், முடிந்தால் முஸ்லிம்களிடமிருந்து களவாடிய அத்தனை காணிகளையும் முஸ்லிம்களுக்கு கொடுப்பதுதான் நியாயமென்ற உண்மையையும் சத்தியத்தையும் உரத்து இந்த நாட்டுக்கு சொல்லுங்கள் என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment