கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க வேண்டாம் : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 31, 2023

கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க வேண்டாம் : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க வேண்டாமென கூறி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹரகம கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்து வருவதாகக் கோரி குறித்த மத்ரஸாவின் சொத்துக்களை விற்க வேண்டாமென்று தெரிவித்து இன்று (31) ஜும்ஆத் தொழுகையின் பின்னர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை கபூரிய்யா மத்ரஸாவின் பழைய மாணவர்கள் மற்றும் புத்தளம் பெரிய பள்ளிவாசல் ஆகியன ஏற்பாடு செய்திருந்தன.

உலமாக்கள், கபூரிய்யாஹ் மத்ரஸாவின் பழைய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இனைந்து குறித்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கபூரிய்யா மத்ரஸா கபூர் அவர்களினால் பொதுச் சொத்தாக வக்ப் செய்யப்பட்டுள்ளமையினால் குறித்த மத்ரஸாவின் சொத்துக்களை கபூரின் 4 வது பரம்பரையில் உள்ள அஸ்மத் கபூர் என்பவரால் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக குறித்த சொத்துக்களை விற்க வேண்டாமென்று தெரிவித்து குறித்த அமைதி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கபூரிய்யா மத்ரஸாவைப் பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

No comments:

Post a Comment