பெற்றோல் விலை அதிகரிப்பு! - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 1, 2023

பெற்றோல் விலை அதிகரிப்பு!

இன்று (புதன்கிழமை) நள்ளிரவு (02) முதல் அமுலுக்கு வரும் வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 விலை ரூ.30 இனால் அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

குறித்த விலைக் குறைப்புக்கு அமைய, ஒக்டேன் 92 வகை பெற்றோலின் புதிய விலை ரூ. 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெற்றோல் 95, டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

வளமை போன்று, LIOC நிறுவனமும் குறித்த விலை அதிகரிப்பை உறுதி செய்துள்ளது.

அதற்கமைய,
பெற்றோல் ஒக்டேன் 92 : ரூ. 370 இலிருந்து ரூ. 30 இனால் அதிகரிப்பு - புதிய விலை ரூ. 400

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,
பெற்றோல் ஒக்டேன் 95 : ரூ. 510
ஒட்டோ டீசல் : ரூ. 405
மண்ணெண்ணெய் : ரூ. 355
சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) - ரூ. 510
தொழிற் பயன்பாட்டு மண்ணெணெண்ணெய் - ரூ. 464

குறித்த விலைக்கு நிகராக, LIOC எரிபொருட்களும் விலைகளும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த ஜனவரி 03 முதல் டீசல் ரூ. 15 இனாலும்; மண்ணெண்ணெய் ரூ. 10 இனாலும் குறைக்கட்பட்டிருந்தது.

அதற்கு முன்பு டீசல் விலை லீற்றருக்கு ரூ. 10 இனால் குறைக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 12 முதல் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலைகள் லீற்றருக்கு முறையே ரூ. 25 மற்றும் ரூ. 15 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

ஒக்டோபர் 17 முதல் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் டீசல் விலைகள் முறையே ரூ. 40, ரூ. 15 இனால் குறைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஒக்டோபர் 02 முதல் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் 95 விலைகள் முறையே ரூ. 40, ரூ. 30 இனால் குறைக்கப்பட்டிருந்தது.

ஓகஸ்ட் 22ஆம் திகதி மண்ணெண்ணெய் விலை ரூ. 253 இனால் அதிகரித்து ரூ. 340 ஆக திருத்தப்பட்டிருந்தது.

கடந்த ஓகஸ்ட் 02ஆம் திகதி முதல் டீசல் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு ரூ. 430 ஆக விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment