மஹேல ஜனவர்தனவின் இலங்கை கிரிக்கெட் அணி, 19 வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் ஏ அணியின் அலோசனை பயிற்சியாளர் பதவி ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஓர் ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய அணியின் கிரிக்கெட் செயற்பாடுகளுக்கு பொறுப்பானவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட ஜயவர்தன இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயல்திறன் மையத்தில் வீரர்கள் மற்றும் முகாமைத்துவ குழுவுக்கு மூலோபாய ஆதரவையும் வழங்கி வருகிறார்.
போட்டிகளுக்கு, குறிப்பாக 19 வயதுக்கு உட்பட்ட மட்டத்தில் மஹேலவின் பங்களிப்பு தொடர்பில் கிரிக்கெட் சபை திருப்தி அடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜயவர்தன இலங்கை தேசிய அணிக்கு பயிற்சிக் குழுவை பணியமர்த்துவதிலும் பெரும் பங்கு வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மஹேல ஜயவர்தனவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் பரந்த பொறுப்புகள் கொண்ட பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment