கடமைகளைப் பொறுப்பேற்றார் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 2, 2023

கடமைகளைப் பொறுப்பேற்றார் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக அமித் ஜயசுந்தர இன்று (02) முற்பகல் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு 21ஆவது ஆணையாளர் நாயகமாவார்.

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான எல்.எம்.டி. தர்மசேனா, ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக அமித் ஜயசுந்தர இன்று முற்பகல் உத்தியோகபூர்வமாக பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமித் ஜயசுந்தர இதற்கு முன்னர் நிர்வாக பிரிவின் பரீட்சைகள் ஆணையாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment