(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசிலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்ட மூலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாேசனைக்குழு எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் கூடுகின்றது.
அரசிலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்ட மூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை எதிர்வரும் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்துவதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் அரசிலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்ட மூலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாேசனைக்குழு எதிர்வரும் 4ஆம் திகதி 2 மணிக்கு கூடுவதற்கு தீர்மானித்திருக்கின்றது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வின் தலைமையில் கூட இருக்கும் இந்த ஆலாேசனைக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த சட்ட மூலம் தொடர்பான தங்களின் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இதேவேளை, மின்சக்தி மற்றும் வலுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாேசனைக்குழுக் கூட்டம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் அன்றையதினம் காலை 11 மணிக்கு கூட இருக்கின்றது.
அத்துடன் அரச நிதி தொடர்பான குழு எதிர்வரும் 3ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கும் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழு எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 3 மணிக்கும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 29ஆம் திகதி முதல் தடவையாக கூடிய தேசிய சபையின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி 3 மணிக்கு இடம்பெற இருப்பதாக பாராளுமன்ற ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment