இலங்கை வந்தடைந்துள்ள மற்றுமொரு எரிபொருள் கப்பல் : இறக்கும் பணிகள் நாளை என்கிறார் அமைச்சர் காஞ்சன விஜேசேகர - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

இலங்கை வந்தடைந்துள்ள மற்றுமொரு எரிபொருள் கப்பல் : இறக்கும் பணிகள் நாளை என்கிறார் அமைச்சர் காஞ்சன விஜேசேகர

மற்றுமொரு டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளதாகவும் அதனை இறக்கும் பணிகள் சனிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

“கடந்த 2 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டது எனவும், விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு.பெட்ரோல் 92, 95 ஒக்டைன் ஆகியவற்றின் விநியோகம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது என எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தள்ளார்.

No comments:

Post a Comment