பேரவாவிக்குள் குதித்து தப்பிச் சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

பேரவாவிக்குள் குதித்து தப்பிச் சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை போராட்டக் காரர்கள் தடுத்து நிறுத்தியதையடுத்து பேரவாவிக்குள் பாய்ந்து போராட்டக் காரர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று காலை முதல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொழும்பில் உள்ள ‘மைனா கோ கம’ மற்றும் கோட்டா கோ கம’ ஆகிய இரண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்ட தளங்களையும் அழித்திருந்தனர்.

இதையடுத்து முதல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை முன்னேரவிடாமல், போராட்டக் காரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து போராட்டக் காரர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள சிலர் பேரவெவவில் குதித்து தப்பிச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment