தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை இன்று சிலரால் உடைக்கப்பட்டுள்ளது.
டி.ஏ. ராஜபக்ஷ சகோதரர்களான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை ஆவார்.
கொழும்பில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்களால் இன்று மாலை டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நாளை வரை அமுலில் உள்ள போதிலும் இந்த சம்பவம் இலங்கையில் பரவலாக அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment