துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவு! - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 10, 2022

துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவு!

பொதுச் சொத்துகளை சூறையாடுவோர் அல்லது தனிநபர்களுக்கு தீங்கு விளைவிப்போர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்த முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதை அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே நிலைமையினை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment