இலங்கையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் மட்டுப்பாடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

இலங்கையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் மட்டுப்பாடு

வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த உச்சபட்ச மட்டுப்பாடு இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர், அமைச்சரவை இணைப் பேச்சாளர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இன்றையதினம் (24) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய,மோட்டார் சைக்கிள்
ரூ.2,000 இலிருந்து ரூ.2,500

முச்சக்கர வண்டி
ரூ.3,000

கார் உள்ளிட்ட வாகனங்கள்
ரூ.8,000 இலிருந்து ரூ.10,000

பஸ், லொறி உள்ளிட்ட வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment