துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான “ஷிரான் பாஷிக்” இன் உதவியாளர்கள் இருவர் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்னிப்பிட்டிய ருக்மல்கம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயது நபரொருவரும் 45 வயது பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 13 கிலோ கிராம் ஹெரோயின், 6 கிலோ கிகராம் ஹெஷ், 500 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருட்களும், 15 இலட்சம் ரூபா ரொக்கப் மற்றும் கார் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment