இன்று (30) முற்பகல் கொழும்பு புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் இனந்தெரியாத இருவரால் பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் நின்றிருந்த குறித்த நபர்கள் மீது T-56 வகை துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, கொழும்பு புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment