நள்ளிரவு முதல் இ.போ.ச., தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு : குறைந்தபட்சம் 32 ரூபா - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

நள்ளிரவு முதல் இ.போ.ச., தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு : குறைந்தபட்சம் 32 ரூபா

இன்று நள்ளிரவு (25) முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்களை 19.5% இனால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இவ்வனுமதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய குறைந்தபட்ச கட்டணம் ரூ. 32 ஆக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டண அதிகரிப்பானது, இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) மற்றும் தனியார் ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த பஸ்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பஸ் உரிமையாளர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமையவும், அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையிலும் இவ்வாறு பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, பஸ் கட்டணங்கள் 35% இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 20 இலிருந்து ரூ. 27 ஆக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment