இரகசிய வாக்கெடுப்பில் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவு : 3 வாக்குகள் நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 5, 2022

இரகசிய வாக்கெடுப்பில் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவு : 3 வாக்குகள் நிராகரிப்பு

பிரதி சபாநாயகர் பதவிக்காக இன்றையதினம் (05) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வெற்றிடமான பிரதி சபாநாயகர் பதவிக்காக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில், பாராளுமன்றத்தில் இன்று (04) இரகசிய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

வாக்கெடுப்பு நிறைவில் வாக்குகள் எண்ணப்பட்டது. அதற்கமைய, ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் 65 வாக்குகளையும் பெற்றிருந்ததோடு, 3 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய 83 மேலதிக வாக்குகளால் பிரதி சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

No comments:

Post a Comment