பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் வீட்டின் மீது தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Monday, April 4, 2022

பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் வீட்டின் மீது தாக்குதல்

பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வகையில் போராட்டங்களை மேற்கொண்டு வருவதோடு அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மக்களால் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொலன்னறுவையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் அலுவலகத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் அவரது வீட்டை நோக்கி சென்றுள்ளனர்.

அங்கு சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்கார்கள் நுழைந்து வீட்டுக்கும் பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment