(எம்.எப்.எம்.பஸீர்)
எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தார், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மாலைதீவு நோக்கி பயணமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று திங்கட்கிழமை (4) காலை 8.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 102 எனும் விமானத்தில் அவர் இவ்வாறு பயணமாகியுள்ளதாக அறிய முடிகிறது.
அவர் வெளிநாடு செல்லும் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தின் கணினி கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு கமரா கட்டமைப்பில் கோளாருடன் கூடிய நிலைமை ஒன்று இருந்துள்ளதாகவும் இவ்வாறான நிலைமைக்கு மத்தியிலேயே நிசங்க சேனாதிபதி விமான நிலையம் ஊடாக வெளியேறியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும் விமான நிலையத்தின் குறித்த திடீர் கோளாறு நிலைமை தொடர்பில் பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களான ராஜபக்ஷ குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர்கள் நாட்டை வீட்டு வெளியேறும் நிலைமைகள் தொடர்பில் சமூக வலைத் தளங்களும் செய்தித்தளங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையிலேயெ ஜனாதிபதிக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவரான எவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வலுவடைந்து வரும் நிலையிலேயே இந்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் மனைவி உள்ளிட்ட சிலர் நேற்றுமுன்தினம் காலை நாட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment